For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்: விஜயகாந்த் சுறு சுறு!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமிக்கும் பணியில் விஜயகாந்த் தீவிரமாக இறங்கியுள்ளார்.

தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தைத் தொடங்கியுள்ள விஜயகாந்த், கட்சியை பலப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளார். முதல்கட்டமாக சட்டசபைத் தேர்தலுக்கு கட்சியினர் தயாராகும் வகையில் அனைத்துத் தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை அவர்நியமிக்கவுள்ளார்.

ஒவ்வொரு தொகுதிக்கும் நியமிக்கப்படவுள்ள பொறுப்பாளர்களை தேர்வு செய்யம் பணியில் அவர் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். கட்சியின்பொதுச் செயலாளர் ராமு வசந்தனுடன் இதுதொடர்பாக அவர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தொகுதி பொறுப்பாளர்களின் முக்கியப் பணி, அந்தத் தொகுதியில் கட்சியை பலப்படுத்துவது, தொண்டர்களின் பணிகளை பகிர்ந்தளித்துகட்சியை வலுப்படுவதாகும். வருகிற சட்டசபைத் தேர்தலின்போது கட்சி தேர்தலை வலுவுடன் சந்திக்கும் வகையில் கட்சியை மாற்றுவதுஇவர்களின் முக்கிய வேலையாகும்.

சிறப்பாக செயல்படும் பொறுப்பாளர்களையே கட்சியின் வேட்பாளராக அறிவிக்கவும் விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். இதையடுத்துபொறுப்பாளர் பதவிக்கு விஜயகாந்த் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இருப்பினும் தொகுதியில் நன்கு அறிமுகம் ஆன, எந்தவிதப் புகாருக்கும் ஆளாகாமல் உள்ள ரசிகர்களையே பொறுப்பாளராக நியமிக்கவிஜயகாந்த் முடிவு செய்துள்ளார். இதில் சீனியர், ஜூனியர் என்ற பாகுபாடும், ஜாதிப் பாகுபாடும் இருக்காது என்றும் விஜயகாந்த் கட்சிவட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X