சென்னை வந்த மதுரை விமானத்தில் வெடிகுண்டு புரளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதுரையிலிருந்து சென்னை வந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த புரளியால் பெரும் பரபரப்புஏற்பட்டது.

மதுரையிலிருந்து சென்னைக்கு தினசரி இரவு பயணிகள் விமானம் இயக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை இரவும் வழக்கம் போலமதுரையிலிருந்து விமானம் கிளம்பி சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள்வைக்கப்பட்டிருப்பதாக சென்னை போலீஸ் கட்டுப்பாட்டுப் பிரிவுக்குத் தகவல் வந்தது.

இதையடுத்து உளவுத்துறை போலீஸார், விமான நிலைய பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கொடுத்தனர். விமானநிலையத்தில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது, ஆம்புலன்சுகள், தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன.

விமானம் தரையிறங்கியதும், பாதுகாப்புப் படையினர் பயணிகள் அனைவரையும் சோதனையிட்டனர். அவர்கள் கொண்டு வந்தபொருட்கள், சூட்கேஸ்கள் சோதனையிடப்பட்டன. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. விமானத்திலும் வெடிகுண்டுகள்எதுவும் இல்லை.

இந்தப் புரளி காரணமாக சென்னை விமான நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+