தமிழக சட்டசபை நாளை கூடுகிறது
சென்னை:
தமிழக சட்டசபையின் மழைக்காலக் கூட்டத் தொடர் புதன்கிழமை கூடுகிறது. ஒரு வாரம் இக்கூட்டத் தொடர் நடைபெறும் எனத்தெரிகிறது.
சட்டசபை கடந்த மார்ச் மாதம் கூடி ஏப்ரல் 13ம் தேதி முடிவடைந்தது. 6 மாதங்களுக்கு ஒரு முறை சபையைக் கூட்ட வேண்டும்என்ற விதிமுறைப்படி தற்போது மழைக்காலக் கூட்டத் தொடர் புதன்கிழமை தொடங்குகிறது.மழைக்காலக் கூட்டத் தொடர் பொதுவாக குறுகிய கால கூட்டத் தொடராகவே இருக்கும். அதன்படி இந்தக் கூட்டத் தொடர் 7 முதல்10 நாட்கள் வரை நடைபெறும் எனத் தெரிகிறது. சேது சமுத்திரத் திட்டத்திற்கு முதல்வர் ஜெயலலிதா கடுமையாக எதிர்ப்புதெரிவித்து வருகிறார். அதேபோல, மகளிர் சுய உதவிக் குழுக்களை அதிமுக அரசு தவறாகப் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள்குற்றம் சாட்டி வருகின்றன.
இதேபோல கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும்இடையே கடுமையான மோதல்கள் இருந்து வருகிறது. இவை அனைத்தும் இந்தக் கூட்டத் தொடரில் சூட்டைக் கிளப்பும் எனத்தெரிகிறது.
முக்கியமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ஜெயலலிதா கடும் பிரச்சினையை எழுப்புவார் எனத் தெரிகிறது. மேலும்,சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால், இக்கூட்டத் தொடரை தனதுஅரசின் சாதனைகளை விளக்க ஒரு வாய்ப்பாக ஆளுங்கட்சி எடுத்துக் கொள்ளும் எனத் தெரிகிறது.
மொத்தத்தில் அனைத்துக் கட்சிகளும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள், சாதனைப் பட்டியல்களை கையில் வைத்துக் கொண்டு இந்தகூட்டத் தொடரை எதிர்கொள்ளக் காத்துள்ளன. எனவே அணல் பறக்கும் விவாதம், பரஸ்பர குற்றச்சாட்டுக்கள், வெளிநடப்புகள்,கூச்சல் குழப்பங்கள் என இந்த மழைக் காலக் கூட்டத் தொடர் படு விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.












Click it and Unblock the Notifications