ஜெ.வின் பொடா கோரிக்கை: கருணாநிதி எதிர்ப்பு
சென்னை:
பொடா சட்டத்தை மறுபடியும் கொண்டு வர வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கோரியிருப்பதற்கு திமுக தலைவர் கருணாநிதி எதிர்ப்புதெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: நக்சலைட் பிரச்சினையைத் தீர்க்க பொடா சட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என முதல்வர் ஜெயலலிதா டெல்லியில் நடந்த முதல்வர்கள் மாநாட்டில் கூறியுள்ளார். இதை ஏற்க முடியாது.நக்சலைட் பிரச்சினைக்கு முக்கியக் காரணம் வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை ஆகியவையே. அப்பிரச்சினைகளைத் தீர்த்தால்நக்சலைட்டுகள் உருவாவதைத் தடுக்க முடியும். அதை விடுத்து பொடா சட்டத்தின் மூலம் நக்சலைட்டுகளை ஒழிக்க முடியாது.
வேலையில்லாத் திண்டாட்டம், ஏழ்மை ஆகியவற்றை ஒழிக்க தமிழக அரசு உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. இந்தநிலையில் அவற்றை சரி செய்வதை விட்டு விட்டு அரைவேக்காட்டுத்தனமான நடவடிக்கையில் அது இறங்க முற்படுகிறது.
பொடா சட்டத்தை தமிழக அரசு எப்படிப் பயன்படுத்தியது என்பதை அனைவரும் அறிவார்கள். எனவே பொடா சட்டத்தை மீண்டும்கொண்டு வரச் செய்து, அதை அரசியல் ரீதியில் பழிவாங்கும் ஆயுதமாக பயன்படுத்த ஜெயலலிதா திட்டமிடுகிறார்.
எனதருமைச் சகோதரர் வைகோ 19 மாதங்கள் சிறையில் வாடினார். நெடுமாறன் பொடாவுக்கு பலியானவர்களில் ஒருவர். வைகோவும்மற்றவர்களும் நக்சலைட்டுகளா? எதற்காக அவர்கள் மீது பொடா பாய்ந்தது?
சட்டத்தை மீறுவோர் மீது பொடாவைப் பாய்ச்ச வேண்டும் என்று ஜெயலலிதா கூறுவாரேயானால், அளவுக்கு மீறி சொத்துக்களைக்குவித்தவர்கள் மீது என்ன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது என்று கேட்டுள்ளார் கருணாநிதி.