தமிழக சட்டசபை கூடியது; 28ம் தேதி வரை நடைபெறும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டசபையின் மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று காலை கூடியது. முன்னாள் சபாநாயகர் முனு ஆதியின் மறைவுக்குஇரங்கல் தெரிவித்த பின்னர் சபை இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக சட்டசபையின் குறுகிய கால மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்குக் கூடியது. சபை கூடியதும்,சபாநாயகர் காளிமுத்து திருக்குறளுடன் கூட்டத்தை ஆரம்பித்தார்.

பின்னர் மறைந்த முன்னாள் சபாநாயகர் முனு ஆதிக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதேபோல தாமரைக்கனிஉள்ளிட்ட மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 13 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானமும் தனியாக தாக்கல்செய்யப்பட்டது.

இதையடுத்து உறுப்பினர்கள் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து சபைக் கூட்டம் இன்று முழுவதும்ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

அதன் பின்னர் சட்டசபை அலுவல் ஆய்வுக் குழு சபாநாயகர் அறையில் கூடி கூட்டத் தொடர் குறித்து முடிவு செய்தது. இதன்அடிப்படையில், வருகிற 28ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும். வருகிற 23ம் தேதி நிதியமைச்சர் பொன்னையன் துணைநிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்வார். அதன் மீது 26ம் தேதி விவாதம் நடைபெறும். 28ம் தேதி விவாதத்திற்கு பொன்னையன்பதில் அளிப்பார். அத்துடன் கூட்டத் தொடர் நிறைவு பெறும்.

முன்னாள் சபாநாயகர் முனு ஆதி, 1962ம் ஆண்டு முதல் நான்கு முறை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1977 முதல் 1980வரை அவர் சபாநாயகர் பதவியில் இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+