போலி ஆவணம் மூலம் பண மோசடி: வாலிபர் கைது
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
போலியான அரசு உத்தரவுகளைக் காட்டி லட்சக்கணக்கில் மோசடி செய்த வாலிபரை புதுவை போலீஸார் கைது செய்தனர்.
புதுவை ஒலந்தை கீரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் வேலையில்லாமல் இருக்கும் பல இளைஞர்களைஅணுகி, அவர்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பறித்துள்ளார்.பின்னர் போலியான அரசு முத்திரைகளைக் கொண்டு போலியான அரசு உத்தரவுகளை தயாரித்து அவற்றை பணம் கொடுத்தஇளைஞர்களிடம் கொடுத்துள்ளார். அதை உண்மையான அரசு ஆணை என நினைத்த இளைஞர்கள் சம்பந்தப்பட்ட அரசுஅலுவலகங்களுக்கு சென்று காட்டியபோதுதான் நடந்த மோசடி தெரிய வந்தது.
பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து ராமகிருஷ்ணனை போலீஸார்கைது செய்தனர். இளைஞர்கள் பலரிடம் ரூ. 10 லட்சத்திற்கும் மேல் ராமகிருஷ்ணன் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.அவரிடமிருந்து போலியான அரசு முத்திரைகள், ரப்பர் ஸ்டாபுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications