For Daily Alerts
Just In
நடுக் கடலில் மின்னல் தாக்கி மீனவர் பலி
சென்னை:
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த மீனவர் ஒருவர் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி பரிதாபமாகஇறந்தார்.திருவான்மியூர் குப்பம் பகுதியைச் சேர்ந்த சண்முகம், பாண்டியன் உள்ளிட்ட 3 மீனவர்கள் இன்று அதிகாலை மீன் பிடிக்கச் சென்றனர்.கடலில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது.
இதில் சண்முகம் மீது மின்னல் தாக்கியது. இதில் உடல் கருகிய அவர் துடித்தபடியே கடலுக்குள் விழுந்தார். இறந்து போய் விட்ட அவரதுஉடலை மீட்க மற்ற இருவரும் கடுமையாகப் போராடினர். ஆனால் அவர்களால் சண்முகத்தின் உடலை மீட்க முடியவில்லை.
இதையடுத்து அவர்கள் கரை திரும்பினர். இதைத் தொடர்ந்து 20 படகுகளில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கடலுக்குள் விரைந்து சென்று பலமணி நேரம் போராடி சண்முகத்தின் உடலை மீட்டுக் கொண்டு வந்தனர்.
Story first published: Sunday, September 25, 2005, 5:30 [IST]