விமான நிலையத்தில் பட்டபாடு: உதவ மறுத்த விஜய்காந்த்
சென்னை:
தமிழ்ப் பெண்கள் குறித்த குஷ்புவின் பேட்டி விவகாரத்தில் அவருக்கு துணை நிற்க நடிகர் சங்கத் தலைவர் விஜய்காந்த்மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தியா டுடேவுக்குத் தந்த பேட்டியால் பெரும் பிரச்சனை உருவானதையடுத்து சிங்கப்பூரில் இருந்து நேற்று இரவு சென்னைவந்தார் குஷ்பு.விமான நிலையத்திற்கு வெளியே குஷ்பு வந்தபோது, அங்கிருந்த சிலர் கோபத்தில் செருப்பை தூக்கி குஷ்புவை நோக்கிக்காட்டினர். ஒரு காலத்தில் தனக்கு கோவில் கட்டிய அதே ஊரில் செருப்பு காட்டப்பட்டதைக் கண்டு அதிர்ந்து போன குஷ்புஅங்கிருந்து வேக, வேகமாக காரில் ஏறிப் பறந்தார்.
இதையடுத்து இந்த விவகாரத்தில் நடிகர் சங்கத்தின் ஆதரவைக் கேட்டதாகத் தெரிகிறது. ஆனால், தமிழ்ப் பெண்கள் குறித்துபேசியதற்கு வருத்தம் தெரிவித்துவிடும்படி விஜய்காந்த் கூறியதாகத் தெரிகிறது. மேலும் இந்த விஷயத்தில் நடிகர் சங்கம்தலையிடாது என்றும் அவர் கூறிவிட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்தே பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் முடிவுக்கு குஷ்பு வந்ததாகத் தெரிகிறது.
ஜெயா டிவியில் நிகழ்ச்சி நடத்தி வருவதால் இந்த விவகாரத்தில் தனக்கு அரசுத் தரப்பின் ஆதரவு கிடைக்கும் என்று குஷ்புஎதிர்பார்ப்பதாகத் தெரிகிறது. ஆனால், மிக சென்சிட்டிவான இந்த விவகாரத்தில் அவர்களது ஆதரவு கிடைக்குமா என்பதுசந்தேகமே.