சென்னை நீதிமன்றங்களில் வெடிகுண்டு புரளி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகரில் உள்ள முக்கிய நீதிமன்றங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக வந்த புரளியைத்தொடர்ந்து நீதிமன்றப் பணிகள் பல மணி நேரம் பாதிக்கப்பட்டன.
சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை இன்று காலை ஒரு மர்ம ஆசாமி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார். எழும்பூர், சைதாப்பேட்டை, ஜார்ஜ் டவுன் ஆகிய நீதிமன்றங்களில் வெடிகுண்டுகள்வைக்கப்பட்டுள்ளன. அவை எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறும் என்று மிரட்டிவிட்டு தொலைபேசியைவைத்துவிட்டார்.இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து அந்த நீதிமன்றங்களில் மோப்பநாய்களுடன் சோதனை மேற்கொண்டனர். பல மணி நேரம் இந்த சோதனை நடந்தது.
ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இந்த மிரட்டலையடுத்து சென்னை நகரின் அனைத்து நீதிமன்றங்களுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.நீதிமன்றங்களுக்குள் ஆட்டோக்கள், வழக்குகளுக்குச் சம்பந்தப்படாதவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications