For Daily Alerts
Just In
ஈழ ஆதரவு புத்தகம்: தமிழர் தேசிய இயக்க பிரமுகருக்கு பிடிவாரண்ட்
சென்னை:
ஈழம் சிவக்கிறது என்ற புத்தகத்தை எழுதியதற்காக தொடரப்பட்டுள்ள வழக்கில், தமிழர் தேசிய இயக்கத்தைச்சேர்ந்த புத்தக பதிப்பாளர் ஷாகுல் ஹமீதுவுக்கு சென்னை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
தமிழர் தேசிய இயக்கப் பிரமுகரான ஷாகுல் ஹமீது, ஈழம் சிவக்கிறது என்ற நூலை இயக்கம் சார்பில்வெளியிட்டிருந்தார்.இந்த நூல் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக உள்ளதாக கூறி தமிழக அரசு தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், பதிப்பாளர் ஷாகுல் ஹமீது ஆகியோரை பொடா சட்டத்தில் கைது செய்தது.
இந்த வழக்கில் சென்னை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்படுவதாக இருந்தது. இதையடுத்து பழ. நெடுமாறன் நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால் ஷாகுல் ஹமீதுவரவில்லை.
இதைத் தொடர்ந்து அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார்.வழக்கு அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
Comments
Story first published: Tuesday, September 27, 2005, 5:30 [IST]