குஷ்பு நேரில் ஆஜராக திருச்சி, திருவண்ணாமலை நீதிமன்றங்கள் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

திருச்சி - திருவண்ணாமலை:

Kushboo

கற்பு குறித்த விவகாரத்தில் தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கில் வரும் அக்டோபர் 13, 14ம் தேதிகளில் நேரில் ஆஜராகவேண்டும் என நடிகை குஷ்புவுக்கு திருவண்ணாமலை மற்றும் திருச்சி நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.

திருமணமாகாத பெண்களின் கற்பு குறித்து குஷ்பு பேசியதைக் கண்டித்து சென்னை, திருவண்ணாமலை மற்றும் திருச்சியில்வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் பாமகவின் சார்பில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை வரும் அக்டோபர் 5ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருச்சி 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சித்ரா என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். குஷ்புவை தண்டிக்கக்கோரி அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதி அதை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார்.

விசாரணையை அக்டோபர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி உமா மகேஸ்வரி, அன்றைய தினம் குஷ்பு நேரில் ஆஜராகிவிளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

அதே போல திருவண்ணாமலை நீதிமன்றத்தில் கமாட்சி என்ற பெண் குஷ்பு மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த மனுவைவிசாரணைக்கு ஏற்ற நீதிபதி மாணிக்கம் வரும் 13ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு குஷ்புவுக்கு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+