For Daily Alerts
Just In
ஒய்யாரக் கொண்டையும், ஜெயலலிதாவும்!
சென்னை:
எனக்கு இயற்கையாகவே நீண்ட கூந்தல் உண்டு. சவரி முடியையெல்லாம் நான் பயன்படுத்துவது இல்லை என்று முதல்வர்ஜெயலலிதா சட்டசபையில் கூறி, அவைக் கூட்டத்தை கலகலப்பூட்டினார்.
பட்ஜெட் துணை ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் குறுக்கிட்டு அவர் பேசுகையில்,இங்கே திமுக உறுப்பினர் ஆற்காடு வீராசாமி பேசினார். அவரது தலைவர் அவர்களது நாளிதழில் என்னைப் பற்றிவர்ணித்துள்ளார். ஒய்யாரக் கொண்டை, தாழம்பூ, சவரி முடி என்றெல்லாம் அவர் எழுதியுள்ளார்.
எனக்கு ஒய்யாரக் கொண்டைதான். ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இயற்கையாகவே எனக்கு நீண்ட கூந்தல் உண்டு. சவரிமுடியையெல்லாம் நான் பயன்படுத்துவது இல்லை.
எனது கொண்டையில் உள்ள முடி எப்படி உண்மையானதோ, அதைப் போல துணை நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதிட்டங்களும் உண்மையானவை. அவை நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றார் ஜெயலலிதா.
Comments
Story first published: Thursday, September 29, 2005, 5:30 [IST]