ஆபாச நடனம்: சென்னை பார்க் ஹோட்டலுக்கு உயர் நீதிமன்றம் தடை
சென்னை:
குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும் மது பாரை திறந்து வைத்து, ஜோடி ஜோடியாக நடனமாட அனுமதித்த சர்ச்சையில் சிக்கியுள்ள சென்னைபார்க் ஹோட்டலில் புதிதாக யாரையும் தங்க அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் பார்க் ஹோட்டல் உள்ளது. 3 நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஹோட்டல் இது. இங்கு கடந்த 25ம் தேதி இரவுபேஷன் ஷோ நடத்தப்பட்டது. இதற்கு போலீஸாரிடம் உரிய அனுமதி பெறப்படவில்லை என்று தெரிகிறது.
இந்த நிகழ்ச்சியில் பலரும் ஜோடியாக நடனமாடினர். அப்போது ஆண்களும், பெண்களும் ஜோடிகளை மாற்றிக் கொண்டனர்.உடைகளையும் கலைந்து கொண்டு மெளத் கிஸ்சில் ஆரம்பித்து எல்லா விதமான வக்கிரங்களிலும் ஈடுபட்டனர்.
இந்தப் படங்கள் பத்திரிக்கைகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இதைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜின் உத்தரவின்பேரில் ஹோட்டலின் மது பார் மேலாளர், ஹோட்டல்இயக்குனர் ஆகியோரைக் கைது செய்தனர்.
ஹோட்டலின் உரிமமும் 90 நாட்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஹோட்டல்நிர்வாகியான ரஸ்தோகி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி முருகேசன், மனுதாரர் மீது கடுமையான குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஹோட்டலில் உள்ள பார் மீதுநடவடிக்கை எடுக்க தடை விதிக்கப்படுகிறது. அதேசமயம், ஹோட்டலில் புதிதாக யாரையும் தங்க அனுமதிக்கக் கூடாது.
தற்போது தங்கியுள்ளவர்கள் தொடர்ந்து தங்கியிருக்கலாம் என்று அவர் இடைக்கால உத்தரவில் தெரிவித்தார்.
வழக்கு விசாரணை நாளைக்கு (அக்டோபர் 1) ஒத்திவைக்கப்பட்டது.