ராதாகிருஷ்ணன் வழக்கு: செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து, சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்குமாற்றப்பட்டுள்ளது.சங்கர மட முன்னாள் பக்தரான ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் சென்னை மந்தைவெளியில் வைத்துத் தாக்கப்பட்டார். இந்த வழக்கில்ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, அப்பு உள்ளிட்ட 11 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கில் ரவி சுப்பிரமணியம்அப்ரூவராக மாறியுள்ளார்.
அவரது வாக்குமூலத்தைத் தொடர்ந்து இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து சென்னை அமர்வுநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இன்று இந்த வழக்கு அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அப்பு, ரகு, சுந்தரேச அய்யர் உள்ளிட்ட 9 பேர் ஆஜரானார்கள். ஜெயேந்திரர் ஆஜராகவில்லை.
இதைத் தொடர்ந்து கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றிய நீதிபதி முருகேசன், வழக்கு விசாரணையை அக்டோபர் 14ம்தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications