சேது திட்டத்துக்கு எதிர்ப்பு: ஜெவுக்கு திமுக கூட்டணி கண்டனம்
சென்னை:
சேது சமுத்திரத் திட்டத்தை கடுமையாக எதிர்த்து வரும் முதல்வர் ஜெயலலிதாவைக் கண்டித்து சென்னையில் நடந்த திமுக கூட்டணிக் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.இதில் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன், காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுகபொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் வரதராஜன்,மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், சேது சமுத்திரத் திட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில் அதைகடுமையாக எதிர்த்து, முட்டுக்கட்டை போட முயலும் ஜெயலலிதாவைக் கண்டித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பணி நீக்கப்பட்ட சாலைப் பணியாளர்களுக்கு கோர்ட் உத்தரவிட்டும் வேலை கொடுக்காமல் திமுக மீது அவதூறு கூறிக் கொண்டிருக்கிறார்ஜெயலலிதா. அதை விடுத்து உடனடியாக அவர்களுக்கு வேலை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications