புயல் சின்னம்: தமிழகத்தில் கன மழை பெய்யும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இப்போது ஒரிஸ்ஸா-ஆந்திர எல்லையில் மையம் கொண்டுள்ள இந்த தாழ்வு மண்டலம், புயல் சின்னமாக மாறி தெற்கே நகரும்போது வட மாவட்டங்களில் கன மழை பெய்யும்.
அதே போல இந்த ஆண்டு வட கிழக்குப் பருவமழை ஒரு வாரத்துக்கு முன்பே தொடங்கவிடும் என்றும் தெரிகிறது. வழக்கமாக அக்டோபர் 2வது வாரத்தில் தொடங்கும் மழை இப்போது முன் கூட்டியே தொடங்குவதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக வானிலை மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications