For Quick Alerts
For Daily Alerts
Just In
கார் இறக்குமதி வழக்கில் நடராஜன் மனு தள்ளுபடி
சென்னை:
லக்ஸஸ் கார் இறக்குமதி செய்தது தொடர்பான வழக்கில் இருந்து தன்னை விடுவிக்ககோரி சசிகலாவின் கணவர் நடராஜன்தாக்கல் செய்த மனுவை சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.கடந்த 1993ம் ஆண்டு லண்டனில் இருந்து லக்ஸஸ் டொயோட்டா காரை இறக்குமதி செய்தபோது, அரசுக்கு 1 கோடி ரூபாய்இழப்பு ஏற்படுத்தியதாக சசிகலாவின் கணவர் நடராஜன் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குபதிவு செய்தது.
சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரியும், உடந்தையாகஇருந்த சுங்கத் துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரியும் நடராஜன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது.
இம் மனுவை விசாரித்த நீதிபதி சிங்காரவேலு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Comments
Story first published: Tuesday, October 4, 2005, 5:30 [IST]