கஞ்சா வழக்கு: செரீனா, தாயார் நீதிமன்றத்தில் ஆஜர்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
![]() |
செரீனா, அவரது தாயார் ரமீஜா, கார் டிரைவர் சதீஷ் ஆகியோர் மீது மதுரை கருப்பாயூரணி போலீசார் கஞ்சாகடத்தல் வழக்கு பதிவு செய்தனர். இதில் கைதான செரீனா ஜாமீனில் வெளி வந்துள்ளார்.
இந்த வழக்கு மதுரை போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது.வழக்கில் கடந்த மாதம் தான் சாட்சிகள் விசாரணை ஆரம்பமானது.
இரண்டாம் கட்ட சாட்சி விசாரணை நேற்று நடந்தது. அப்போது செரீனா, அவரது தாயார் ஆகியோர்நீதிமன்றத்தில் ஆஜராயினர். ஆனால், சாட்சிகளான வண்டியூரை சேர்ந்த எம்.எஸ்.கணேசன், பி. கணேசன்,சென்னையை சேர்ந்த வெங்கடசுப்பைய்யா, பொன்னன், சுகுமாறன் ஆகியோர் ஆஜாரகவில்லை.
இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 17ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி மாணிக்கம் அறிவித்தார்.













Click it and Unblock the Notifications