For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கராத்தே குடும்பத்துக்கு போலீஸ் பாதுகாப்பு: அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

துணை மேயர் கராத்தே தியாகராஜனின் குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

தனது உயிருக்கும் குழந்தைகள் உயிருக்கும் ஆபத்து உள்ளதாகவும், தங்களுக்கு போலீஸ் அல்லது மத்திய அரசின் பாதுகாப்புவேண்டும் என்றும் கோரி கராத்தேவின் மனைவி ஜோதி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

தனக்கும் தனது கணவர், குடும்பத்தினருக்கு போலீசார் தொல்லை தருவதற்கும் தடை விதிக்க வேண்டும். முன்பிருந்த அதேபாதுகாப்பை மீண்டும் வழங்க வேண்டும் என்று தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி முருகேசன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திரன்,

துணை மேயரின் பாதுகாப்பு எக்ஸ் பிரிவில் இருந்து ஒய் பிரிவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் துப்பாக்கி ஏந்திய 3போலீசாருக்குப் பதிலாக அவருக்கு ஒரே ஒரு பாதுகாப்பு அதிகாரி பாதுகாப்பு அளிப்பார்.

கடந்த 29ம் தேதி இந்த அதிகாரி தியாகராஜனுக்கு பாதுகாப்பு வழங்க அவரது வீட்டுக்குப் போன போது, தியாகராஜன்அங்கில்லை. தியாகராஜன் மீது இதுவரை வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்றார்.

இதையடுத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி, கராத்தேவின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு உடனடியாக போலீஸ் பாதுகாப்புவழங்க உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X