For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

170 எஸ்.ஐகளுக்கு இன்ஸ்பெக்டர் பதவி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் 170 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு தமிழக அரசு இன்ஸ்பெக்டர்களாகப் பதவி உயர்வு வழங்க முடிவு செய்துள்ளது.

வழக்கமாகவே போலீசாருக்கு தனி கவனிப்பு செலுத்தும் முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் வருவதையொட்டி இந்தப் பதவி உயர்வை வழங்கவுள்ளார்.

இரு நாட்களுக்கு முன்பு தான் 110 இன்ஸ்பெக்டர்களுக்கு டிஎஸ்பிக்களாக பதவி உயர்வு தந்தார் ஜெயலலிதா. இதனால் 110 பதவிகள் காலியாகின்றன. மேலும் ஏற்கனவே 60 இடங்கள் காலியாக உள்ளன.

இந் நிலையில் இந்த காலி இடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த சப்-இன்ஸ்பெக்டர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் 330 பேர் இடம் பிடித்துள்ளனர்.

இவர்களில் 170 பேருக்கு இன்ஸ்பெக்டர் பதவிகள் தரப்படவுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X