மதுரை இளைஞரின் செல் குறள்!
மதுரை:
திருக்குறளை தினம் படிப்போரை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படிப்பட்டவர்கள் மத்தியில் வித்தியாசமான இளைஞராகதிகழ்கிறார் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியரான முரளி.
இவரது தினசரி வேலைகளில் ஒன்று செல்போன் மூலம் நண்பர்கள், உறவினர்களுக்கும் திருக்குறளை எஸ்.எம்.எஸ் அனுப்புவது.குறளுடன் அதற்குரிய விளக்கத்தையும் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வருகிறார் முரளி.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, திருக்குறள் நமது தாய் மொழியில் இருந்தாலும் அது உலகப் பொதுமறையாகும். உலகின்எந்தப் பகுதியைச் சேர்ந்தவருக்கும் திருக்குறளில் கூறப்பட்டுள்ள விளக்கங்கள் மிகவும் பொருத்தமானதாகும்.
இந்தப் பெருமையை உணர்ந்த நான் அதை அனைவரும் அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்பதற்காக, தினசரிசெல்போன் மூலம் எனது நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்களுக்கு எஸ்.எம்.எஸ். செய்து வருகிறேன்.
இதை அனைவரும் வரவேற்றுள்ளார்கள். ஒருவேளை நான் குறள் அனுப்பாவிட்டால் அவர்களே எனக்குப் போன் செய்துஇன்றைய குறள் என்னவாயிற்று என்று கேட்கும் அளவுக்கு எனது குறள் சேவை உள்ளது.
இது எனக்கு மன நிறைவையும், சந்தோஷத்தையும் கொடுத்துள்ளது. நவீன தொழில்நுட்பத்தை இதுபோல பயன்படுத்துவதுதிருப்தியாக உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications