தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரம் அருகே நடுக் கடலில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அடாவடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கடந்த 15ம் தேதி முதல் மீண்டும் கடலுக்குள்செல்ல ஆரம்பித்துள்ளனர்.

திங்கள்கிழமை 500க்கும் மேற்பட்ட படகுகளில் அவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். நடுக்கடலில், கச்சத்தீவு அருகேஅவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படையினர் வந்தனர்.

தமிழக மீனவர்களை முற்றுகையிட்ட கடற்படையினர் கண்மூடித்தனமாக தாக்கினர். வலைகளை சேதப்படுத்தியும், மீன்களைப்பறித்துக் கொண்டும் அட்டகாசம் செய்தனர்.

படகுகளில் தப்ப முயன்ற மீனவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் மிரட்டினர். கடற்படையினரின் கொலை வெறித்தாக்குதலிலிருந்து ஒரு வழியாக் தப்பி வந்துள்ளனர் இந்த மீனவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+