விமானிகள் இல்லாமல் ஹெலிகாப்டர்கள்: பாக். கோரிக்கை- இந்தியா நிராகரிப்பு
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளுக்குப் பயன்படுத்த இந்திய ராணுவ ஹெலிகாப்டர்களை விமானிகள்இல்லாமல் வழங்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது.
நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இமயமலைத் தொடரில் அமைந்த முஸாபராபாத் உள்ளிட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளுக்குநிறைய ஹெலிகாப்டர்கள் தேவைப்படுகின்றன. இதையடுத்து அமெரிக்கா தனது ஹெலிகாப்டர்களை விமானிகளுடன்அனுப்பியுள்ளது.அதே போல இந்தியாவும் ஹெலிகாப்டர்களை வழங்க முன் வந்தது. ஆனால், இந்திய ஹெலிகாப்டர்களை ஏற்க முன் வந்தபாகிஸ்தான் அரசு, இந்திய விமானிகளின் உதவியை ஏற்க மறுத்துவிட்டது.
விமானிகள் அல்லாமல் ஹெலிகாப்டர்களை மட்டும் வழங்குமாறு பாகிஸ்தான் கோரியது. பாதுகாப்பு ரகசியங்களை முன் வைத்துபாகிஸ்தான் இவ்வாறு நடந்து கொண்டது.
ஆனால், பாகிஸ்தானின் இக் கோரிக்கையை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது.












Click it and Unblock the Notifications