For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்துகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மின் வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் அண்ணா சாலையில் பணி நிரந்தரம்வேண்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மின் வாரியத்தில் 5 ஆண்டுகள் பணி புரிந்ததாக அடையாளம் காணப்பட்ட 8,500 ஒப்பந்தத்தொழிலாளர்கள் மற்றும் 300 பகுதி நேரத் தொழிலாளர்களுக்கு ரூ.750 கருணைத் தொகை வழங்கப்படும் என்றுமுதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதை ஏற்க மறுத்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் வரும் 24ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தஉள்ளதாக அறிவித்துள்ளனர்.

தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் நவம்பர் 8ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம்நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

அப்போதும் கோரிக்கை ஏற்கபடாவிட்டால் டிசம்பர் 1ம் தேதி கன்னியாகுமரி முதல் சென்னை கோட்டை வரைபாதயாத்திரை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X