மத்திய அமைச்சரவையில் சேரும் மதிமுக?
டெல்லி:
மத்திய மந்திரிசபையில் மதிமுக சேரும் என்று தெரிகிறது. இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குடன் வைகோ டெல்லியில்பேச்சு நடத்தினார்.
பாஜக ஆட்சியில் அமைச்சரவையில் இருந்தது மதிமுக. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சர் பதவிகள் வேண்டாம் எனமறுத்துவிட்டார் அக் கட்சியின் தலைவரான வைகோ. ஆனால், கட்சியின் அவைத் தலைவரான எல்.கணேசன் மற்றும் செஞ்சிராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் சேர வேண்டும் என வைகோவை நெருக்கி வருகின்றனர்.இதை வைகோ ஏற்க மறுத்து வந்தார். இந் நிலையில் மத்தியில் அமைச்சரவையை மாற்றி அமைக்க பிரதமர் மன்மோகன் சிங்திட்டமிட்டுள்ளார். மதிமுகவை அமைச்சரவையில் சேருமாறு பிரதமர் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதனால் இம்முறை அமைச்சரவை மாற்றத்தின்போது மதிமுகவுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்க காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் பிரதமரும் விரும்புகின்றனர்.
இது குறித்து வைகோவுடன் நேற்று பிரதமர் ஆலோசனை நடத்தினார். அப்போது அமைச்சரவையில் சேருமாறு வைகோவிடம்பிரதமர் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
இதையடுத்து வைகோவின் நிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எல்.கணேசனுக்கு கேபிடனர் அமைச்சர்பதவியும் இன்னொருவருக்கு இணையமைச்சர் பதவியும் பெற வைகோ முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த முறை அமைச்சர்களாக இருந்த செஞ்சி ராமச்சந்திரனுக்கு இம்முறை வாய்ப்பு கிடைக்காது என்று தெரிகிறது.இணையமைச்சர் பதவிக்கு எம்.பி. கிருஷ்ணனின் பெயரை வைகோ பரிந்துரைப்பார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications