For Daily Alerts
Just In
கோர்ட் வளாகத்தில் நிர்வாணமாக ஓடிய வாலிபர்
சென்னை:
சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில், வாலிபர் ஒருவர் ஆடைகள் எதுவுமின்றி நிர்வாணமாக ஓடியதால்பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்த, எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றவளாகத்தில் ஒரு வாலிபர் வந்தார். அவர் திடீரென தான் அணிந்திருந்த உடைகளை கழற்றி வீசிவிட்டுநிர்வாணமானார். பின்னர் ஆவேசமாக நடனம் ஆடினார். பிறகு அங்கும் இங்குமாக ஓடினார்.எனக்கு சாமி வந்துள்ளது என்று கூறி அவர் படு ஆவேசமாக ஆடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாகஅங்கு நின்றிருந்த போலீஸார் அந்த வாலிபரைப் பிடிக்க முயன்றனர்.
ஆனால் யார் கையிலும் சிக்காமல் அந்த நபர் டபாய்த்த வண்ணம் ஓடிக் கொண்டிருந்தார். பின்னர் பொதுமக்கள்,வழக்கறிஞர்களின் உதவியுடன் அந்த நபரை போலீஸார் பிடித்து காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
அந்த வாலிபரின் பெயர் திவாகர் என்றும், மன நிலை பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிய வந்தது. தகவல் அறிந்துஅவரது பெற்றோர் காவல் நிலையம் வந்தனர். பிறகு அவருக்கு போலீசார் அறிவுரை கூறி ர பெற்றோர்களுடன்அனுப்பி வைத்தனர்.
Comments
Story first published: Sunday, October 23, 2005, 5:30 [IST]