For Quick Alerts
For Daily Alerts
Just In
கன மழை: திருச்சி மலைக்கோட்டை சுவர் சேதம்
திருச்சி:
திருச்சியில் பெய்த கன மழைக்கு புகழ்பெற்ற மலைக்கோட்டை வெளிப்புற சுவர் சேதமடைந்துள்ளது.தமிழகம் முழுவதும் பரவலாக வட கிழக்குப் பருவ மழைபெய்து வருகிறது. திருச்சியில் இரவு முழுவதும் பெய்தமழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியது.
கன மழைக்கு இந்திய தொல்பொருள்துறையின் நினைவுச் சின்னமாக விளங்கும் திருச்சி மெயின்கார்ட்கோட்டையின் வெளிப்புற மதில் சுவர் இடிந்து விழுந்தது.
வேலூரிலும் கன மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. சத்துவாச்சாரி பகுதியில் பாறை ஒன்று கீழே உருண்டுவிழுந்ததில், 5 வீடுகள் முற்றிலும் தரைமட்டமாகின. இதில் அந்த வீடுகளில் இருந்த இரண்டு சிறுமிகள் பதாபமாகஉடல் நசுங்கி இறந்தனர்.
Comments
Story first published: Sunday, October 23, 2005, 5:30 [IST]