For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை மக்களுக்கு ஜெ. தந்த தீபாவளிப் பரிசு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தீபாவளி முதல் சென்னை நகரில் குழாய்கள் மூலம் தினசரி குடிநீர் விநியோகம் தொடங்கியுள்ளது.

சென்னை நகரில் நிலவும் கடும் குடிநீர்ப் பற்றாக்குறை காரணமாக பல காலமாகவே குழாய்கள் மூலம் தினசரிகுடிநீர் விநியோகம் இல்லாமல் இருந்தது.

முன்பு குடிநீர் லாரிகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வந்தது.

தற்போது புதிய வீராணம் திட்டத்தின் மூலம் தினசரி குடிநீர் விநியோகம் நடந்து வருகிறது. இந்த நிலையில்வீடுகளுக்கு குழாய்கள் மூலம் தினசரி குடிநீர் வழங்குவது தீபாவளி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட ஒரு அறிக்கையில், சென்னை நகரில் கடந்த ஜூன் மாதம்பெரும் குடிநீர்ப் பஞ்சம் நிலவியது. நகரையே காலி செய்யும் நிலைக்கு அந்தப் பஞ்சம் சென்றது.

ஆனாலும், புதிய வீராணம் திட்டத்தின் மூலம் சென்னை நகரம் காப்பாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகஅரசு மேற்கொண்ட பல்வேறு திட்டங்கள் மூலம் சென்னை நகரின் குடிநீர்ப் பஞ்சம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னை நகரில் குழாய்கள் மூலம் தினசரி குடிநீர் வழங்க உத்தரவிட்டுள்ளேன். தீபாவளி தினம்தல் இந்த முறை அமலுக்கு வரும்.

புதிய வீராணம் திட்டத்தின் மூலம் மட்டுமே தினசரி குடிநீர் வழங்குவது சாத்தியமாகியுள்ளது.

இதன் மூலம் சென்னை நகரின் தலையெழுத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார் ஜெயலலிதா.

அவரது அறிவிப்பின்படி சென்னை மாநகரில் உள்ள குடிநீர் குழாய்களில் குடிநீர் விநியோகம் நேற்று முதல்தொடங்கியது. இனிமேல் தினசரி குடிநீர், குழாய்கள் மூலம் கிடைக்கும் என்பதால் பொதுமக்கள்சந்தோஷமடைந்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X