கராத்தே முன் ஜாமீன் மனு: 7ம் தேதி தீர்ப்பு
சென்னை:
சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன் தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்புவருகிற 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது, விளம்பரப் பலகைகள் வைக்க ஒப்பந்தம் செய்ததில்முறைகேடு என பல்வேறு புகார்களில் சிக்கியுள்ள கராத்தே தியாகராஜன், கடந்த சில வாரங்களாகதலைமறைவாக உள்ளார்.அவரைக் கைது செய்ய சென்னை போலீஸார் வட மாநிலங்களில் முகாமிட்டு தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தநிலையில் தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் கராத்தே சார்பில்முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கராத்தே சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தினகர்,தற்போதைக்கு மனுதாரர் மீது எந்த வழக்கும் இல்லை.
இருப்பினும், ஏதாவது ஒரு வழக்கைப் போட்டு அதில் அவரைக் கைது செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.எனவே மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முருகேசன், வருகிற 7ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார்.












Click it and Unblock the Notifications