காவிரியில் மீண்டும் வெள்ளம்: 1000 குடிசைகள் பாதிப்பு
ஈரோடு:
காவிரியில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டதால் ஈரோட்டில் சுமார் 1000 குடிசைகள் தண்ணீரில் மிதந்தன.
கடந்த வாரம் கனத்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையிலிருந்து 2லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.இதை தொடர்ந்து காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளான ஈரோடு, கரூர், திருச்சி உள்பட 11 மாவட்டங்களில்சேதம் ஏற்பட்டது. இதில் ஏராளமான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
இந்த நிலையில் மீண்டும் மேட்டூர் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால்அணைக்கு நீரின் வரத்து அதிகமானதால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும்அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மழை வெள்ளத்தால் கரையோர பகுதிகளானஈரோடு, வைராபாளையம், கருங்கல்பாளையம், பள்ளிபாளையம், ஊஞ்சலூர், இலுப்பை தோப்பு, கொடுமுடி,அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் உள்ள குடிசைகள் மூழ்கும் நிலையில் தத்தளிக்கின்றன.
இதே போல் பவானி வட்டாரத்தில் அம்மாப்பேட்டை, நெறிஞ்சிப்பேட்டை, மற்றும் சுற்றுவட்டார இடங்களிலும்உள்ள 1000க்கும் மேற்பட்ட வீடுகள், குடிசைகள் தண்ணீரில் மிதக்கின்றன.
இதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக மேடான பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications