காவிரி வெள்ள அபாயம் குறைந்தது
மேட்டூர்:
மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து வெகுவாக குறைந்ததால் காவிரியில் வெள்ள அபாயம் குறைந்தது.
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் கன மழை பெய்து வந்ததால் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்குமீண்டும் நீர்வரத்து அதிகரித்தது.விநாடிக்கு 75,000 கன அடி நீர் வரை வந்ததால், காவிரியில் வெள்ளப் பெருக்கு அபாயம் ஏற்பட்டது.இதையடுத்து காவிக் கரையோரம் உள்ள 11 மாவட்டங்களில் மீண்டும் பீதி ஏற்பட்டது.
ஸ்ரீரங்கம், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை மாலைக்கு மேல் குறைய ஆரம்பித்தது.
இன்று காலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 50,000 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்துஅதே அளவிலான நீரே வெளியேற்றப்படுகிறது.
அணைக்கு வரும் மற்றும் வெளியேற்றப்படும் நீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு அபாயம் குறைந்துள்ளது. இதனால் காவிரிக் கரையோரப் பகுதி மக்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications