தமிழகம் முழுவதும் மேலும் 2 நாட்களுக்கு மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழகம் முழுவதும் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்.நேற்று முன்தினம் வங்க கடலின் தெற்கு மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதுஇலங்கைக்கும், தமிழ் நாட்டுக்கும் இடையே மையம் கொண்டுள்ளது.
இந்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்துள்ளதால் தமிழ்நாடு புதுச்சேரியில் மேலும் 2 நாட்களுக்கு பலத்த மழைபெய்யும். சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.
மேலும் பலத்த சூறாவளி காற்று வீசும். வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 45 மால் 55 கி.மீ. வேகத்திற்கு காற்றுவீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் மேக மூட்டமாக காணப்படும். மழை தூறல் விழுந்து கொண்டே இருக்கும். சில சமயம் இடியுடன்கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications