பெண்ணை பின் தொடர்ந்தால் 7 ஆண்டு சிறை
டெல்லி:
பெண்களை பின் தொடர்ந்தாலோ, கிண்டல் செய்தாலோ 7 ஆண்டு சிறை தண்டனை வழங்க செய்யும் புதிய சட்டம்கொண்டு வர பரிசீலிக்கப்படுகிறது.
பெண்களை கிண்டல் செய்தால் ஈவ்-டீசிங் இந்திய தண்டனை சட்டம் 509வது பிரிவின் கீழ் தண்டனை வழங்கமுடியும்.பெண்களை பின் தொடர்ந்து சென்று தொந்தரவு கொடுத்தால் 7 ஆண்டு சிறையும் அபராதமும் வழங்கும் புதியசட்டம் ஒன்று கொண்டு வரப்படுகிறது.
இதற்கு இந்திய தண்டனை சட்டம் 509பி என்ற புதிய பிரிவு சேர்க்கப்படுகிறது.
இதற்கான திருத்த மசோதாவை தேசிய பெண்கள் கமிஷன் தயாரித்துள்ளது.
இதன் படி ஒருவர் ஒரு பெண்ணை 3 முறை பின் தொடர்ந்து தொந்தரவு செய்தாலோ அல்லது வேலை பார்க்கும்இடத்திலோ, வீட்டிற்கோ சென்று தொந்தரவு செய்தாலோ குற்றமாகக் கருதப்படும்.
டெலிபோனில் பேசி தொந்தரவு கொடுப்பது, பொருட்களை அனுப்பி தொந்தரவு தருவது ஆகியவையும் இந்தபிரிவின் கீழ் குற்றமாக கருதப்படும்.
இந்த மாதம் இந்த திருத்த மசோதாவை அரசுக்கு அனுப்பி வைத்து விடுவோம் என்று அகில இந்திய ஜனநாயகமாதர் சங்கத்தை சேர்ந்த கீர்த்தி சிங் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications