ஐடியல் மீது மேலும் 12 வழக்கு! மொத்தம் 23!
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
மோசடி மன்னன் ஐடியல் சுப்பிரமணியம் மீது மேலும் 12 வழக்குகள் திண்டுக்கல் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதையும் சேர்த்து மொத்தம் 23 வழக்குகள் ஐடியல் மீது போடப்பட்டுள்ளது.
வத்தலகுண்டைச் சேர்ந்த ஐடியல் சுப்ரமணியம், கொடைக்கானலை மையமாகக் கொண்டு பல பேரிடம் மோசடி செய்துகோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளார். இந்த மோசடிகள் தொடர்பாக ஐடியலை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைதுசெய்தனர்.முதலில் அவர் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து மேலும் 7 வழக்குகள் போடப்பட்டன.
இந் நிலையில் தற்போது மேலும் 12 வழக்குகள் ஐடியல் மீது போடப்பட்டுள்ளன. இதற்காக ஐடியல் சுப்ரமணியம், அவரதுகூட்டாளிகள் செளந்தரராஜன், மணிகண்டன் ஆகியோர் சென்னையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் திண்டுக்கல் நீதிமன்றத்திற்குஅழைத்து வரப்பட்டனர்.
திண்டுக்கல் 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஐடியல் மற்றும் கூட்டாளிகள் மீது இந்த வழக்குகளைப் போலீஸார் பதிவு செய்தனர்.இந்த வழக்குகளையும் சேர்த்து தற்போது ஐடியல் மற்றும் கூட்டாளிகள் மீதான வழக்குகளின் எண்ணிக்கை 23 ஆகஉயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications