விமானத்தை கடத்த தீவிரவாதிகள் சதி: சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு
சென்னை:
விமானத்தைக் கடத்தவோ அல்லது விமான நிலையங்களின் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தவோ தீவிரவாதிகள்திட்டமிட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து சென்னை உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள முக்கிய விமான நிலையங்களில்பாதுகாப்பும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
விமான நிவையங்களைத் தீவிரவாதிகள் தாக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து மத்திய உள்துறைஅமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் நேற்றிரவு எச்சரிக்கையை அனுப்பியது.இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலைய ஊழியர்கள் உள்படஅனைவரையும் கடும் சோதனைக்குப் பின்னரே விமான நிலையங்களுக்குள் போலீசார் அனுமதிக்கின்றனர். அதே போல டெல்லி,மும்பை, ஜம்மூ, ஹைதராபாத், கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களிலும் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளுக்குள் நடந்த தொலைபேசி உரையாடலை மத்திய புலனாய்வு அமைப்புகள் ஒட்டு கேட்டபோது இந்த விவரம்தெரியவந்தது. இதையடுத்து விமான நிலையங்களைப் பாதுகாக்கும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின்கமாண்டோக்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications