கருணாநிதியுடன் அய்யர் சந்திப்பு: கராத்தே குறித்து ஆலோசனை?
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை பெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர் சந்தித்துப் பேசினார். அப்போது கராத்தேதியாகராஜனை காங்கிரசில் சேர்ப்பது குறித்து கருணாநிதியின் அனுமதியை அய்யர் கோரியதாகக் கூறப்படுகிறது.
தமைறைவாகவுள்ள சென்னை துணை மேயர் கராத்தே தியாகராஜனை காங்கிரசில் சேர்க்க மணிசங்கர் அய்யர் முயன்று வருகிறார்.ஆனால், அதற்கு காங்கிரஸ் கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.அந்த எதிர்ப்புகளைப் பற்றி காங்கிரஸ் தலைமை அவ்வளவாகக் கவலைப்படவில்லை. அதே நேரத்தில் பதவியில் இருந்தபோதுதிமுக கவுன்சிலர்களை படாதபாடு படுத்தினார் கராத்தே. இதனால், அவரை கட்சியில் சேர்க்க திமுகவின் கிளியரன்ஸை அக் கட்சிஎதிர்பார்க்கிறது.
இந் நிலையில் கருணாநிதியை சந்தித்த அய்யர், கராத்தே குறித்து பேசியதாகத் தெரிகிறது.
ஆனால், இச் சந்திப்பு குறித்து நிருபர்கள் கேட்டபோது, இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என அய்யர்பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இனியும் உடனடியாக பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு இருக்காது. விலையைஉயர்த்தாமல் இருந்ததால் கடந்த ஆண்டு மட்டும் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 35,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் குரூட் எண்ணெயின் விலை உயர்ந்தாலும், அந்த விலையேற்றத்தில் வெறும் 13 சதவீதத்தைத் தான் பொதுமக்கள் மீது சுமத்தினோம். மிச்சத்தை எண்ணெய் நிறுவனங்களும் நிதியமைச்சகமும் ஏற்றுக் கொண்டன.