திருப்பதியில் பெண்கள் பூ சூடி வர திடீர் தடை!!
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
ஆகம விதிப்படி திருப்பதி கோவிலுக்குள் வரும் பெண்கள் பூ வைக்கக் கூடாது என்று ஆலய நிர்வாகம் திடீர் தடைவிதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருப்பதி கோவிலுக்குள் வரும்போதும், திருமலையிலும் பெண்கள் தலையில் பூ வைக்கக் கூடாது என திருப்பதி திருமலைதேவஸ்தானம் திடீர் தடை விதித்துள்ளது. இந்த விதி இன்று முதல் (திங்கள்கிழமை) அமலுக்கு வருகிறது.
இதற்கு ஆகம விதிகள் காரணம் காட்டப்பட்டுள்ளன. கோவிலில் க்யூ காம்ப்ளெக்சில் பெண்கள் பூவோடு இருந்தால் அதைஎடுத்துவிடுமாறு கோவில் ஊழியர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இது தொடர்பாக அறிவிப்பை வாகனங்களில் மைக் மூலமும் கோவில் நிர்வாகிகள் அறிவித்து வருகின்றனர். மேலும் திருமலையில்உற்பத்தியாகும் அனைத்துப் பூக்களும் ஏழுமலையானுக்கே சொந்தம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications