உதவி: மக்களிடம் மனு வாங்க மறுத்து கலெக்டர்
சென்னை:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கோரிக்கை மனு வாங்க திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மறுத்தார்.
காரணம்: அவர்கள் நிவாரண உதவி கேட்டு மறியல் செய்தது.இந்த வினோத சம்பவம் பொன்னேரி பகுதியில் நடந்தது. சமீபத்திய மழை வெள்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டபகுதிகளில் ஒன்று திருவள்ளூர் மாவட்டத்தின் கீழ் வரும் பொன்னேரி. இங்கு நிவாரணப் பணிகளும் மீட்புப் பணிகளும் மிகவும்மந்தகதியில் தான் நடந்தன.
மேலும் நிவாரண உதவிகளும் உரிய நேரத்தில் வந்து சேரவில்லை. இதனால் அப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆனாலும் அதனால் பலன் ஏற்படவில்லை.
இந் நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை திருவள்ளூர் கலெக்டர் பங்கஜ்குமார் பன்சால் இன்று பார்வையிட வந்தார்.அப்போது விச்சூர் கிராம மக்கள் தங்கள் ஊராட்சித் தலைவர் சின்னப் பொண்ணுவின் தலைமையில் கலெக்டரிடம் நிவாரணஉதவி கேட்டு மனு கொடுக்க வந்தனர்.
ஆனால், அந்த ஊருக்குள் நுழைய மறுத்த கலெக்டர், அவர்களிடம் மனு வாங்கவும் மறுத்துவிட்டார்.
நீங்க தானே போராட்டம் நடத்தியவர்கள்.. உங்களிடம் மனு வாங்க மாட்டேன் என்று இந்தி கலந்த கொச்சைத் தமிழில்சொல்லிவிட்டு காரில் ஏறிப் போய்விட்டார். இதனால் அப் பகுதி மக்கள் நொந்து போயினர்.
இவர் கலெக்டர்தானா என்ற சந்தேகத்துடன் மக்கள் கலைந்து சென்றனர்.
நிவாரணத்தில் பங்கு!!:
இதற்கிடையே தங்களுக்கு அரசு வழங்கிய நிவாரண நிதியில் பங்கு கேட்டு ஏரியா தாதாக்களும் ரெளடிகளும் மிரட்டுவதாகக் கூறிதாம்பரத்தில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிவாரணம் கிடைப்பதற்கு டோக்கன்கள் வழங்குவதிலும் ஏரியா ரெளடிகள் மற்றும் சில அரசியல் தலைகளின் தலையீடுஇருந்தது குறிப்பிடத்தக்கது.