தமிழக பெண் கேரளத்தில் கற்பழித்து கொலை
Subscribe to Oneindia Tamil
தென்காசி:
தென்காசியைச் சேர்ந்த பெண் ஒருவர் கொல்லம் அருகே கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.
தென்காசியை சேர்ந்த உஷா (வயது 45) திருமணமாகாத இவர் தனது சகோதரி வேலம்மாளுடன் கேரளா மாநிலம் கொல்லம்மாவட்டம் குண்டரா என்ற இடத்தில் வசித்து வந்தார்.20 வருடங்களாக இந்த பகுதியில் வசிக்கும் உஷா, கூலித் தொழிலாளி. இரு தினங்களுக்கு முன் உஷா தன் வீட்டுக்கு அருகில்உள்ள வாய்க்காலில் குளிப்பதற்காக சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் உஷாவைத் தேடி அவரது சகோதரிவேலம்மாள் வாய்க்காலுக்கு சென்றார்.
அப்போது வாய்க்காலில் உஷா அலங்கோலமான நிலையில் இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வேலம்மாள்போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே கொல்லம் டிஎஸ்பி ஜெயபிரகாஷ், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று உஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications