For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகம்: 2007ல் 2,00,000 அரசு ஊழியர்கள் ஓய்வு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழ்நாட்டில் 2007ம் ஆண்டில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஒரே நேரத்தில் ஓய்வு பெறுகிறார்கள்.

தமிழ்நாட்டில் சுமார் 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஆசிரியர்களின்எண்ணிக்கை மட்டும் 4 லட்சம் ஆகும். அரசு ஊழியர்களில் 3.86 லட்சம் பேர் காலமுறை ஊதியத்தில் நிரந்தர பணியாளர்களாகபணியாற்றி வருகிறார்கள்.

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் தொகுப்பு ஊதியம் பெற்று வருகிறார்கள். தொகுப்பூதியம் பெறுவர்களுக்கு நிரந்தரப்பணியாளர்களைப் போல அனைத்து பயன்களும் கிடைப்பதில்லை.

அரசு ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் கல்வித்துறை, சுகாதாரத்துறைகளைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். அரசுஊழியர்களில் ஆண்டுதோறும் சராசரியாக 45,000 முதல் 65,000 பேர் வரை ஓய்வு பெறுகின்றனர்.

ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும். இந்த நிலையில் 2007ம் ஆண்டில் மட்டும் 2லட்சம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளார்கள். இந்த ஊழியர்கள் அனைவரும் 1970, 1972ம் ஆண்டு அரசுப் பணிகளில்சேர்ந்து சுமார் 30 ஆண்டுகளாகப் பணியாற்றி கொண்டிருக்கிறார்கள்.

அரசு துறைகளில் யாரையும் பணியமர்த்தக் கூடாது என்று தமிழ்நாடு அரசு 2001, நவம்பர் மாதம் வேலை நியமனத் தடை சட்டம்கொண்டு வந்தது. இந்த சட்டம் தற்போது அமலில் இருப்பதால் கடந்த 4 ஆண்டுகனில் புதிதாக அரசு வேலைக்கு ஆட்கள்சேர்க்கப்படவில்லை.

ஆனால் பணி நியமனத் தடை சட்டத்தில் இருந்து கல்வி, மருத்துவம், போலீஸ் ஆகிய துறைகளுக்கு மட்டும் விலக்குஅளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 2007ம் ஆண்டு 2 லட்சத்திற்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளனர். ஏற்கனவே உள்ள 1 லட்சம்காலி பணி இடங்களையும் சேர்த்தால் 3 லட்சத்தையும் வருகிற ஆண்டில் தாண்டிவிடும்.

அரசுப் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்வதை தமிழக அரசு தொடர்ந்து நிறுத்தி வைத்தால், 2007ம் ஆண்டுக்குப் பின் அரசுப்பணிகளில் பெரும் தாமதமும், சில பணிகள் ஸ்தம்பிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X