நக்ஸல்: ஊத்தங்கரை ஸ்டேசனுக்கு பாதுகாப்பு
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலையத்தை நக்ஸலைட்டுகள் தாக்கலாம் என்ற அச்சம் காரணமாக காவல்நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சிறப்புக் காவல் படையைச் சேர்ந்த ஏராளமான போலீசார் நவீன துப்பாக்கிகளுடன் காவல் நிலையத்தைச் சுற்றிநிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் காவல் நிலையத்தின் மீது வாகனத்தில் குண்டுகளை ஏற்றிக் கொண்டு வந்து மோதலாம் என்பதால் போலீஸ் ஸ்டேசனின்வாயில் பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளன.
ஆந்திராவின் மக்கள் யுத்தக் குழுவினரிடம் பயிற்சி பெற்ற சிவா என்ற பார்த்திபனை 3 ஆண்டுகளுக்கு முன் நவம்பர் 24ம் தேதிபோலீசார் ஊத்தங்கரை அருகே வைத்து சுட்டுக் கொன்றனர்.
இதைத்து அதே தேதியில் நக்ஸல்கள் தாக்குதல் நடத்தலாம் என்ற முன்னெச்சரிக்கையோடு இந்தப் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
மேலும் பிகாரில் சில நாட்களுக்கு முன் சிறைச்சாலை மீது மிக சாகசமாக நக்ஸல்கள் நடத்திய தாக்குதலும் இந்த அதிகபட்சபாதுகாப்புக்குக் காரணம் என்று தெரிகிறது.இது தவிர தர்மபுரி, கிருஷ்ணகிரியில் மலைக் காடுகளை ஒட்டிய பகுதிகளிலும் சுமார் 200 இடங்களில் கண்காணிப்பும்போடப்பட்டுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட சிவாவுக்கு அஞ்சலி செலுத்த ஊத்தங்கரைக்கு நக்ஸல்கள் வருவார்கள் எனக் கருதும்போலீசார் அவர்களைப் பிடிக்கவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications