விபாச்சார பெண்கள், கொள்ளையர்கள் கூட்டணி: 4 பேர் கைது
சென்னை:
சென்னையில் விபசார அழகிகளிடம் பணக்காரர்களை வரவைத்து அவர்களிடம் கொள்ளையடித்து வந்த கும்பல் பிடிபட்டுள்ளது.
விபச்சார அழகிகள், புரோக்கர்கள், கொள்ளையர்கள் என்ற கூட்டணி அமைத்து இந்த வேலை நடந்து வந்தது.உல்லாசத்துக்காகப் போய் இவர்களிடம் மாட்டி பணம் இழந்த பலரும் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து உதவிகமிஷனர் அருண் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர் நடத்திய விசாரணையில் கொள்ளையர்களுடன் தொடர்புடைய 3 விபசார புரோக்கர்கள் பிடிபட்டனர். அவர்களைதுருப்பாகப் பயன்படுத்தி கொள்ளையர்களை பிடிக்க போலீசார் திட்டமிட்டனர்.
கோயம்பேடு பகுதியில் அடுக்குமாடி வீட்டில் ஹைதராபாத் பெண்ணிடம் ஜாலியாக இருக்க ஒரு தொழிலதிபர் வருவதாகவும்அவரை மடக்கினால் பல லட்சம் கிடைக்கும் என்றும் புரோக்கர் மூலம் போலீசார் கொள்ளையர்களுக்கு தகவல் அனுப்பினர்.
இதையடுத்து அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வந்த 4 கொள்ளையர்களையும் போலீஸ் தனிப்படை சுற்றி வளைத்துப் பிடித்தது.அவர்கள் பெயர் விவரம்: கார்த்திக் (வயது 30), ராஜா (வயது 23), முருகன் (வயது 26) மோகன் பிரகாஷ் (வயது 32).
இந்த கும்பலின் தலைவனாக செயல்பட்டு வந்தது கருப்பு பாலு என்று தெரிய வந்துள்ளது. இவன் 2001ம் ஆண்டு அம்பத்தூர்ஆயில் மில் அதிபரை கடத்திய வழக்கில் போலீசாரிடம் பிடிபட்டான். அதன் பின்னர் தலைமறைவாகி விட்டான்.
இவனுக்கு அம்பத்தூர், ஆவடி பகுதியில் 2 தனி பங்களாக்கள் சொந்தமாக உள்ளது தெரிய வந்துள்ளது.
சினிமா சான்ஸ் தேடி சென்னை வரும் இளம் பெண்களை புரோக்கர்கள் மூலம் பிடித்து அறையில் அடைத்து வைத்து மயக்க ஊசிபோட்டு கற்பழித்த பின்னர் பணம் நகையை பறித்துக் கொண்டு துரத்தி விடுவது பாலு கும்பலின் வழக்கமாகும்.
இவர்களின் பிடியில் சிக்கியவர் பட்டியலில் பல முக்கிய புள்ளிகள், பெண்கள், சினிமா துணை நடிகைகள், இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள் என்று ஏராளமான பேர் உள்ளனர். ஆனால், உல்லாசமாக இருக்கச் சென்றும், உல்லாசம் கொடுக்கச் சென்றும்இவர்களிடம் மாட்டியவர்கள் என்பதால் அந்த ஆண்களும், பெண்களும் போலீசில் புகார் கொடுக்காமல் இருந்துள்ளனர்.
தலைமறைவாக உள்ள கருப்பு பாலு தான் சங்கரராமன் கொலையில் போலி குற்றவாளிகளைத் தயார் செய்து தந்து அப்புவுக்குஉதவியவன் என்றும் தெரிய வந்துள்ளது. அவனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பாலு தனக்கு கிடைத்த பணத்தில் பாகுபாடு இல்லாமல் போலீசாருக்கு ஒரு தொகையை கொடுத்து வந்துள்ளான். இதனால்அவனுக்கு விசுவாசமாக பல போலீசார் இருந்ததும் இப்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications