சுஹாசினி மீது தமிழறிஞர் உள்பட 7 பேர் வழக்கு
சென்னை:
நடிகை குஷ்புவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள சுஹாசினிக்கு எதிராக தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் வழக்குகள்குவிகின்றன.இந்த நிலையில் சென்னையில் தமிழறிஞர் ஒருவர் சுஹாசினி மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
சுஹாசினிக்கு எதிராக புயல் போல கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. ஈரோடு, வாலாஜபேட்டை, கரூர், திருச்சி ஆகியநீதிமன்றங்களில் சுஹாசினி மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இதுவரை 5 வழக்குகள் அவர் மீது தாக்கலாகி உள்ளது.ஈரோடு மூலப்பாளையம் டெலிபோன் நகரை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் ஈரோடு ஜூடிசியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்சுஹாசினி டிசம்பர் 5ம் தேதி நேரில் ஆஜராகும் படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் 6வது வழக்காக சுஹாசினி மீது சென்னை எழும்பூர் 5வது மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்அரும்பாக்கம் வினாயகபுரத்தை சேர்ந்த சின்னப்ப தமிழர் என்ற தமிழ் அறிஞர் போட்டுள்ளார்.
மாஜிஸ்திரேட் அருள்ராஜ் முன்னிலையில் வழக்கறிஞர் வெங்கடேசன், கணேசமூர்த்தி ஆகியோர் இது தொடர்பான மனு தாக்கல்செய்தனர்.
இந்த மனுவில் சின்னப்ப தமிழர் கூறியிருப்பதாவது:
நான் தமிழ் பண்பாட்டில் அக்கறை உள்ளவன். திருமணத்துக்கு முன்பு பெண்கள் செக்ஸ் உறவு வைத்து கொள்வது குறித்து குஷ்புதெரிவித்த கருத்து எனது மனதை பாதித்துவிட்டது.
குஷ்புக்கு ஆதரவு தெரிவித்து சுஹாசினி கருத்து வெளியிட்டிருக்கிறார். தமிழர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது என்றுசுஹாசினி கேட்டிருக்கிறார்.
இதன் மூலம் தமிழ் மக்களை மற்ற மொழி இனத்தவர்கள் ஏளனமாக பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுஹாசினி வேண்டுமென்றேகலவரத்தை தூண்டும் நோக்கத்தோடு இந்த கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
ஒட்டுமொத்த தமிழர்களையும், தமிழ் பண்பாட்டையும் இழிவுபடுத்தி உள்ளார். எனவே அவர் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ்தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி வருகிற விசாரணையை வருகிற 29ம் தேதிக்கு தள்ளி வைத்துஉத்தரவிட்டார்.
இந்த நிலையில் நாமக்கல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பாவேந்தர் இலக்கிய பேரவையைச் சேர்ந்த முத்துசாமி என்பவர் சுஹாசினிமீது வழக்கு தொடர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.