இந்திய வளர்ச்சிக்கு தடைபோடும் அதிகாரிகள்: சிங்கப்பூர் முன்னாள் பிரதமர்
டெல்லி:
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அதிகாரிகள் தான் முட்டுக்கட்டையாக உள்ளனர் என்று சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லிகுவான் யி கூறியுள்ளார்.
மிகக் குறுகிய காலத்தில் சிங்கப்பூரை பொருளாதாரரீதியில் முன்னேற்றி உலகச் சந்தையில் மிக முக்கிய இடம் பிடித்துத் தந்தவர் லி.ஆசிய பொருளாதார வளர்ச்சியும் இந்தியாவும் என்ற தலைப்பில் டெல்லியில் நடந்த மாநாட்டில் அவர் உரையாற்றினார்.அப்போது அவர் கூறியதாவது:
பொருளாதாரத்தில் உலகநாடுகளுக்கு போட்டியாக இந்தியா விளங்க வேண்டும் என்று கனவு கண்டவர் ஜவஹர்லால் நேரு.இந்திய அதிகாரிகள் தமது திட்டத்தில் சோவியத்தை முன் மாதிரியாக கொண்டு திட்டத்தை வகுக்கிறார்கள். அது சுதந்திரமாக பலஊழல்களுக்கு வழிவகுப்பதால் தான் பொருளாதாரத்தில் மிதமான வளர்ச்சி ஏற்படுகிறது.
இந்தியாவில் இன்னொரு தொழிற் புரட்சி ஏற்பட்டாலொழிய பொருளாதாரத்தில் முன்னேற முடியாது. தொழில் நிறுவனங்கள் தான்நாட்டின் பொருளாதரத்திற்கு முக்கிய பலம்.
இந்த விஷயத்தில் இந்தியா, சீனாவைப் போல் அயல் நாட்டு நேரடி முதலீடுகளை ஈர்க்க வேண்டும். வேலை வாய்ப்புகளைஉருவாக்க வேண்டும்.
அதைச் செய்தால் 2050ம் ஆண்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தை இந்தியா பிடிக்கும்.
ஒரு குறிப்பிட்ட சதவீத இந்திய அதிகாரிகள் பணம் சம்பாதிக்கும் குறிக்கோளில் இருக்கிறார்களே தவிர நாட்டின் வளர்ச்சியைகருத்தில் கொள்ளாமல் உள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications