கிருஷ்ணகிரி: கள்ளச் சாராயத்துக்கு 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் கள்ளச்சாராம் குடித்து பெண் உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 15பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தமிழ்நாட்டில் காவல்துறை கள்ளச் சாராயத்தை ஒழித்துக் கட்டிவிட்டதாக மார்தட்டி வருகிறது தமிழக அரசு. இந் நிலையில்கெலமங்கலம் என்ற இடத்தில் கொட்டும் மழையில் கள்ளச் சாராய வியாபாரம் படு ஜோராக நடந்தது.இங்கு சாராயம் குடித்த சுமார் 20 பேர் மயங்கி விழுந்தனர். பலருக்கு வாந்தியும் வயிறு எரிச்சலும் கண் மங்குதலும் ஏற்பட்டது.
இதில் முனியம்மா (45), கலைமோகன் (43) ஆகியோர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து பலியாயினர். மேலும் ஒருவர்பின்னர் இறந்தார். இவர்களில் முனியம்மா தனது கணவரோடு சேர்ந்து கள்ளச் சாராயம் குடித்தாராம்.
சாராயம் குடித்து மயங்கிய மேலும் 15 பேர் ஒசூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications