கால்வாயில் விழுந்த பஸ்: 27 பயணிகள் தப்பினர்
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூர் மாவட்ட சிதம்பரம் அருகே பஸ் கால்வாயில் விழுந்தது. வெள்ளத்தில் சிக்கிய அந்த பஸ்சில் இருந்த பயணிகளை பொதுமக்களும், தீயணைப்புப் படையினரும் மீட்டதால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.சென்னையில் இருந்து கும்பகோணத்துக்கு அந்த சுற்றுலாப் பயணிகளின் பஸ் சென்று கொண்டிருந்தது. சிதபம்ரம் அருகே அந்தபஸ் சென்று கொண்டிருந்தது. கடும் மழை காரணமாக அப் பகுதி முழுவதும் வெள்ளக் காடாக உள்ளது.
அந்த பஸ் நிலை தடுமாறி கால்வாய்க்குள் விழுந்தது. கால்வாயில் முழு அளவில் நீர் ஓடிக் கொண்டிருந்தது.
இதையடுத்து அப் பகுதி பொது மக்கள் மிகத் துரிதமாக செயல்பட்டு அதிலிருந்த பயணிகளை மீட்டனர். அதற்குள் தீயணைப்புப்படையினரும் விரைந்து வந்துவிட்டனர். அவர்களும் பொது மக்களோடு சேர்ந்து பஸ்சில் இருந்த 27 பயணிகளையும் மீட்டு,பஸ்ஸையும் மீட்டனர்.












Click it and Unblock the Notifications