சிறப்பு நிதி: தமிழக எம்பிக்கள் கோரிக்கை
டெல்லி:
தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளின்கடன்களைத் திருப்பிச் செலுத்த காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும் என்றும் திமுக கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில்இன்று கோரிக்கை வைத்தனர்.
லோக்சபாவில் கேள்வி நேரத்துக்குப் பின் இந்தப் பிரச்சனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்பி மோகன்கிளப்பினார். மத்திய அரசு அறிவித்துள்ள நிதியுதவி போதாது என்று அவர் வாதிட்டார்.பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் சிறு வியாபாரிகள், விவசாயிகளுக்கு வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்த ஓராண்டு காலகூடுதல் அவகாசம் தர வேண்டும் என்றார்.
திமுக எம்பி விஜயன் பேசுகையில், வெள்ளத்தின் பாதிப்பு யாரும் கனவு கூட காண முடியாத அளவுக்கு மிக மிக மோசமாகஉள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துவிட்டனர். அவர்களுக்கு உடனடியான உதவிகள் தேவைப்படுகின்றனஎன்றார்.
காங்கிரஸ் எம்பி கார்வேந்தன் பேசுகையில், வீடுகளை இழந்தவர்களுக்கு இலவச வீடுகளைக் கட்டித் தர மத்திய அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மதிமுக எம்பி எல்.கணேசன் பேசுயிைல், தமிழக்ததில் பெரும்பாலான முக்கிய பாலங்கள் சேதமடைந்துவிட்டன. பயிர்கள் மூழ்கிப்போய்விட்டன. இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
இந்த நிவாரண நிதியை யாரும் முறைகேடாகப் பயன்படுத்திவிடாமல் தடுக்க புதிய விதிகளையும் மத்திய அரசு வகுக்க வேண்டும்என்றார்.
சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி பேசுகையில், தமிழக வெள்ள நிலைமை மிகுந்த கவலை தருகிறது என்றார்.
அமைச்சர் டிஆர் பாலு பதிலளித்துப் பேசுகையில், தமிழத்திற்கு ஏற்பட்ட சேதம் குறித்து மத்திய அரசு ஆய்விட்டு வருகிறது. உரியஉதவிகள் அனைத்தும் நிச்சயம் செய்யப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications