For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகம் ரூ. 13,685 கோடி கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்துக்கு ரூ. 13,685 கோடி வெள்ளச் சேத நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதாகோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக வெள்ளச் சேதத்தை இரண்டாவது முறையாகப் பார்வையிட்ட மத்தியக் குழுவினர் முதல்வர்ஜெயலலிதாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்புக்குப் பின் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதம் வரலாறு காணாதது. ஒரே மாதத்தில் 3 முறை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மாநிலத்தின்பெரும்பாலான பகுதிகள் பெரும் சேதத்தைச் சந்தித்துவிட்டன.

உயிர்கள், பயிர்கள், உடமைகள், சாலைகள், பாலங்கள், ஏரிகள், குளங்கள், அணைகள் என அடிப்படைக் கட்டமைப்புகள் மிகமோசமாக இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இவற்றை முழுமையாக ஆய்வு செய்து சேதம் குறித்த இறுதி அறிக்கை மிகுந்த சிரமத்துக்கிடையே தயார் செய்யப்பட்டுள்ளது.அதன்படி வெள்ளச் சேதத்தால் ஏற்பட்ட பேரழிவை சீர் செய்ய தமிழகத்துக்கு ரூ. 13,685 கோடி தேவை.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க 2.58 லட்சம் டன் கூடுதல் அரிசியும், 43,200 கிலோ லிட்டர் மண்ணெண்ணெயும்தேவை.

வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிதாக வீடுகளைக் கட்டித்தர விரிவான திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும்.அவர்களுக்கு தாற்காலிகக் குடியிருப்பு வசதியும் செய்யப்பட வேண்டும். இந்தத் திட்டத்துக்கு மட்டும் ரூ. 2,558.24 கோடிசெலவாகும்.

கடுமையான வெள்ளத்தால் தமிழகத்தில் 32,000 கி.மீ. சாலைகள் சேதமடைந்துவிட்டன அவற்றை மீண்டும் அமைக்கவேண்டியுள்ளது. இந்தப் பணிக்கு ரூ. 2,523 கோடி தேவை.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X