தமிழகம், புதுவையில் ஒரே நேரத்தில் தேர்தல்
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா:
தமிழகம், பாண்டிச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸம் ஆகிய 5 மாநிலங்களிலும் அடுத்த ஆண்டு ஒரே நேரத்தில் தேர்தல்நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இத் தகவலை தலைமைத் தேர்தல் ஆணையர் தாண்டன் தெரிவித்தார். கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,வரும் மே 24ம் தேதி முதல் ஜூன் 13 வரை இந்த ஐந்து மாநிலங்களின் சட்டமன்றப் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. இதனால்இவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஒரே தேதியில் தேர்தல் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், வாக்கு எண்ணிக்கை ஒரே நாளில் நடக்கும்.பள்ளி, கல்லூரித் தேர்வுகள், பாதுகாப்பு நிலவரம் இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் தேர்தல் தேதி முடிவு செய்யப்படும்.
பிகாரில் மிகத் தீவிரமாக விதிகளை அமல்படுத்தி தேர்தல் நடத்தினோம். அதே போல இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் விதிகள்மிகக் கடுமையாக அமல்படுத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications