மீனாட்சி: கெடு முடிந்தது- சிபிஐ விசாரிக்கும்?
திருச்சி:
கரூர் மாவட்டம் குளித்தலை ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்குவருகிறது. இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுமா என்பது குறித்தும் இன்று தெரிந்துவிடும்.
குளித்தலையை சேர்ந்த ஜோதி ராமலிங்கத்தின் மனைவி ஆசிரியை மீனாட்சி கடந்த 2004ம் ஆண்டு முதல் காணவில்லை. இதுகுறித்து மீனாட்சியின் கணவர் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். ஆனால் அவர்கள் மேற்கொண்டவிசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.இதனால் மீனாட்சியின் கணவர் ஜோதி ராமலிங்கம், தனது மனைவியை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்க போலீசாருக்குஉத்தரவிடக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆசிரியை மீனாட்சி மாயமான வழக்கை சிபிசிஐடியை விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படிசிபிசிஐடியினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் இந்த வழக்கில் சிபிசிஐடியின் விசாரணையிலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து இந்த வழக்கைவிசாரிக்கும் நீதிபதிகள், இதுவரை இந்த வழக்கில் போலீசார் தாக்கல் செய்த சில அறிக்கைகள் சீல் இட்ட கவரில்வைக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் சில அறிக்கைகள் போலீசாரிடமே திரும்ப தரப்பட்டுள்ளது என்றும் கூறினர்.
அவ்வாறு சிபிசிஐடியிடம் திரும்ப தரப்பட்டுள்ள அந்த அறிக்கைகளை நீதிமன்றம் படித்து பார்க்க வேண்டிய அவசியம் தற்போதுஏற்பட்டுள்ளதால், இந்த வழக்கு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் டிசம்பர் 2ம் தேதிக்குள் (இன்று) தாக்கல் செய்யவேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந் நிலையில் மீனாட்சி வழக்கில் குற்றவாளிகளை சிபிசிஐடியினர் நெருங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. அது தொடர்பான விவரஅறிக்கைகளை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி அறிக்கை ஏதும் போலீஸ் தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்படாவிட்டால் இந்த வழக்கை நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றும்சூழ்நிலை உருவாகியுள்ளது.
மீனாட்சி காணாமல் போனதில் அதிமுக எல்ஏவும் மாஜி மந்திரியுமான பாப்பா சுந்தரம் மீதும் சந்தேகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications